![ENTHAN UYIR KADHALIYE RAMANICHANDRAN NOVEL ENTHAN UYIR KADHALIYE RAMANICHANDRAN NOVEL](https://tamilnovelsummaries.com/wp-content/uploads/2023/10/Square-Fit_2022715202324728.jpg)
![ENTHAN UYIR KADHALIYE RAMANICHANDRAN NOVEL ENTHAN UYIR KADHALIYE RAMANICHANDRAN NOVEL](https://tamilnovelsummaries.com/wp-content/uploads/2023/10/Square-Fit_202271694712482.jpg)
நித்திலன் (கதாநாயகன்) தனது பெற்றோருடன் வசிக்கிறான். தனது குடும்ப தொழிலையும் தலைமை ஏற்று நடத்தி வருகிறான். நித்திலனின் அண்ணன் மகேந்திரன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் குடும்பத்தில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. மகேந்திரனின் மனைவி யாமினியாலும் அவனைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
நித்திலனின் தாய் அனுபமாவுடன் (கதாநாயகி) நித்திலனுக்கு திருமணத்தை ஏற்பாடு செய்கிறார். ஆரம்பத்தில் நித்திலன் திருமணம் செய்து கொள்ளத் தயங்கினாலும் பின்னர் சம்மதிக்கிறான். அனுபமாவும் நித்திலனும் ஒருவரையொருவர் விரும்புகிறார்கள். திருமண தேதியும் நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆனால் மகேந்திரனின் மாமியார் நித்திலன் திருமணம் செய்வதை விரும்பாததால் அடிக்கடி பிரச்சனையை உருவாக்குகிறார்.
மறுபுறம் நித்திலனும் அனுபமாவும் நெருங்கி பழகுகிறார்கள். அவர்கள் சந்திக்க முயலும் போதெல்லாம், மகேந்திரனின் பிரச்சனையால் நித்திலனால் அனுபமாவை சந்திக்க முடிவதில்லை. மகேந்திரனின் மாமியார் இதுபோன்ற பிரச்சனைகளை உருவாக்குகிறார்.
இதனால் அனுபமா குழப்பம் அடைகிறாள்.நித்திலனாலும் தனது சகோதரனின் குடிப்பழக்கத்தை அனுபமாவிடம் தெரிவிக்க முடியவில்லை.
மகேந்திரன் காரணமாக நித்திலனால் தன் திருமண வரவேற்புக்கு வர முடியாமல் போகிறது. இதனால் நிலைமை மோசமாகிறது. திருமணத்தை ரத்து செய்துவிட்டு திருமண மண்டபத்தை விட்டு வெளியேறுகிறாள் அனுபமா.
அனுபமாவை சமாதானப்படுத்துவாரா நித்திலன்? மகேந்திரனுக்கு என்ன நடக்கிறது? மேலும் அறியக் கதையைப் படியுங்கள்.
இந்த கதை நாடக பிரியர்களுக்கு ஏற்றது. இந்தக் கதையைப் படித்தீர்களா? கருத்துப் பகுதியில் உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.